அரசியல்உள்நாடு

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – சஜித் பிரேமதாச

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (2025.05.23) எழுப்பிய கேள்வி.

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​தற்போதைய அரசாங்கம், “வளமான நாடு, அழகான வாழ்க்கை” எனும் கொள்கை பிரகடனம் ஊடாக IMF உடன் புதிய கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு இணக்கப்பாட்டை எட்டுவதன் மூலம் முந்தைய அரசாங்கத்தால் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அழுத்தத்தைக் குறைப்பதாக தற்போதைய அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்தது.

மக்கள் நம்பிக்கை வைத்த சர்வதேச நாணய நிதியத்துடன் மிகவும் சாதகமான இணக்கப்பாடுகள் மூலம் புதிய தோற்றப்பாட்டை அடைய தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்துகிறதா என்பது தற்சமயம் பிரச்சினைக்குரியதாக காணப்படுகிறது.

இதன் பிரகாரம், நான் பின்வரும் கேள்விகளை எழுப்புகிறேன். அரசாங்கத்திடமிருந்து இதற்கான குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

  1. இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிணைமுறி கடன் உரிமையாளர்களுக்கு இலங்கை செலுத்த வேண்டிய மொத்தக் கடன் எவ்வளவு?
  2. குறித்த கடன் செலுத்துதல் ஆரம்பமாகும் வருடத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் தனித் தனியாக செலுத்த வேண்டிய கடன் தவணை தொகை (அமெரிக்க டொலர்களில்) எவ்வளவு ?
  3. இந்தக் கடன் கொடுப்பனவுகளை வெற்றிகரமாகச் செயல்படுத்த ஒரு நாடாக அடைய வேண்டிய பருவின பொருளாதார இலக்குகள் (Macro-Economic Targets) அதாவது, பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் மற்றும் ஏனைய இலக்குகள் (உதாரணமாக, அந்நிய செலாவணி இருப்பு நிலைகள், அந்நிய நேரடி முதலீட்டு இலக்குகள்) யாது ?
  4. 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​தற்போதைய அரசாங்கம், “வளமான நாடு, அழகான வாழ்க்கை” எனும் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்ட IMF உடன் புதிய கடன் நிலைபேறு தன்மை இணக்கப்பாட்டை (Debt Sustainability Agreement) எட்ட அரசாங்கத்திற்கு ஆணை கிடைத்தது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அவ்வாறு இல்லையென்றால், புதிய கடன் நிலைபேறு தன்மை இணக்கப்பாட்டை எட்ட தவறியது மக்கள் வழங்கிய ஆணையை காட்டிக் கொடுப்பதாகக் கருதுகிறீர்களா ?
  5. IMF உடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளில் நமது நாட்டிற்கு வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் (Extended Fund Facility) கீழ் தவனை தொகைகளை பெறுவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய குறிப்பிட்ட நிபந்தனைகளை வேறு வேறாக குறிப்பிடவும் ? மின்சாரக் கட்டணத்தை 18% ஆல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது இதன் பிரகாரமா ? விரிவான கடன் வசதியின் கீழ் வழங்கப்படும் கடன் தவணைகளின் எண்ணிக்கை யாது ? அந்த ஒவ்வொரு தவணைகளிலும் கிடைக்கப்பெரும் கடன் தொகை எவ்வளவு ?
  6. தற்போதுள்ள IMF இணக்கப்பாட்டை விட மேலும் சலுகைகளுடன் கூடிய புதிய இணக்கப்பாட்டை எட்டி, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

மேலும், இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இல்லாமல் அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க முடியாது என்பதால், இதற்கான பதில்களை வழங்காமல் இருக்க முடியாது.

எனவே, தீர்வுகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி நாளை மறுதினம் திறக்கப்படமாட்டாது

சீன ஜனாதிபதிக்கு விஜயதாச ராஜபக்ஸ கடிதம்