உள்நாடு

மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு – இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (26) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (27) காலை 8 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இது செல்லுபடியாகும்.

அதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நிலதண்டாஹின்ன மற்றும் மத்துரட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை செல்லுபடியாகும்.

இதேவேளை, மேலும் 7 மாவட்டங்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 12 மாவட்டங்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

எச்சரிக்கை மட்டம் 2 – அவதானத்துடன் இருக்கவும் (Amber)

பதுளை மாவட்டம்:

ஹல்துமுல்ல பசறை

களுத்துறை மாவட்டம்:

வலல்லாவிட்ட புளத்சிங்கள இங்கிரிய

மாத்தறை மாவட்டம்:

பிட்டபெத்தர கொட்டபொல

நுவரெலியா மாவட்டம்:

நுவரெலியா

கண்டி மாவட்டம்:

யட்டிநுவர பாதஹேவாஹெட்ட கங்கவட்ட கோறளை

கேகாலை மாவட்டம்:

மாவனெல்லை

இரத்தினபுரி மாவட்டம்:

கொலன்ன எலபத்த இரத்தினபுரி அயகம பலாங்கொடை கலவானை இம்புல்பே கஹவத்தை நிவித்திகலை

எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள்)

பதுளை மாவட்டம்:

பண்டாரவளை

ஹப்புத்தளை

எல்லை

ஹாலியெல

லுணுகலை பதுளை

கொழும்பு மாவட்டம்:

பாதுக்கை

காலி மாவட்டம்:

நாகொட

அம்பாந்தோட்டை மாவட்டம்:

கட்டுவன

களுத்துறை மாவட்டம்:

மத்துகம ஹொரணை

கண்டி மாவட்டம்:

உடுநுவர

உடபலாத்த

தும்பனை

கங்கையிஹல கோறளை

பஸ்பாகே கோறளை

பாததும்பர

பன்வில

தொழுவ

மெததும்பர

மினிப்பே

கேகாலை மாவட்டம்:

ரம்புக்கனை

ருவன்வெல்ல

தெரணியகலை

யட்டியாந்தோட்டை

கலிகமுவ

அரநாயக்க

கேகாலை

வரகாபொல

குருநாகல் மாவட்டம்:

ரிதிகம

மாவத்தகம

மல்லவப்பிட்டிய

மாத்தளை மாவட்டம்:

நாவுல

யட்டவத்தை

ரத்தோட்டை

அம்பகங்க கோறளை

உக்குவளை

மாத்தறை மாவட்டம்:

பஸ்கொட

நுவரெலியா மாவட்டம்:

அம்பகமுவ கொத்மலை

இரத்தினபுரி மாவட்டம்:

எம்பிலிப்பிட்டிய

ஓப்பநாயக்க

வெலிகெபொல

கிரியெல்ல

Related posts

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!

editor

WHO உத்தியோகபூர்வமாக அறிவித்தால் தான் தடுப்பூசி

பாராளுமன்ற தேர்தலின் பின் கட்சியில் மாற்றம் – நாமல்

editor