உலகம்

‘ப்ரக்சிட்’ நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க கூடாது

(UTV|COLOMBO) – ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் ‘ப்ரக்சிட்’ நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க கூடாது என்ற வாக்குறுதிக்கு சட்டவடிவம் அளிக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள போரிஸ் ஜான்சன், புதிய அமைச்சரவை அமைப்பதற்கான அனுமதியை ராணி எலிசபெத்திடம் முறைப்படி பெற்றார்.

தற்போது தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தை ராணி எலிசபெத் வரும் வியாழக்கிழமை தொடங்கி வைத்து புதிய அரசின் கொள்கைத் திட்டங்கள் மற்றும் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சூடானில் 27 பாதுகாப்பு படையினருக்கு மரண தண்டனை

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்ற பெண் அகதி கைது

editor

ஈராக் மருத்துவமனையில் தீ விபத்தில் 60 பேர் பலி