சூடான செய்திகள் 1

போலி நாணயத் தாள்களை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-ஒரு மில்லியன் டொலர் என அச்சிடப்பட்ட 3 போலி நாணயத் தாள்களை விற்பனை செய்ய முயற்சித்த 18 பேரும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று கண்டி நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கண்டி காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் குறித்த 18 பேரும் அம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டபோது, சந்தேக நபர்கள் வசமிருந்து, ஒரு மில்லியன் டொலர் என அச்சிடப்பட்ட மூன்று போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

கல்முனை விவகாரம் ஹரீஸ் MPயின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை : முஸ்லிம் தலைவர்கள் கல்முனைக்காக குரல் எழுப்புங்கள் – ரஹ்மத் மன்சூர்

பாதுகாப்புச் சபைக்கு வரக்கூடாது என ஜனாதிபதி கூறியதாக அமைச்சின் செயலாளர் கூறினார்

நாளை காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்