உள்நாடு

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்கு வந்தபோது புகுடு கண்ணாவின் சகோதரர் கைது

“புகுடு கண்ணா” என்றும் அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி பாலச்சந்திரன் புஷ்பராஜின் சகோதரர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (13) அதிகாலை இந்தியாவில் இருந்து போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்கு வந்தபோது விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

36 வயதான பாலச்சந்திரன் கஜேந்திரன் என்ற சந்தேக நபர் கொழும்பு 10, ஜம்பட்டா தெருவைச் சேர்ந்தவர் என்று பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

கொரோனா தொற்று – அபாய வலய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 16ஆவது இடம்

நாட்டின் பல பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை

ஊரடங்கிலும் பெரும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில்