சூடான செய்திகள் 1

போதைப் பொருளில் இருந்து தலைமுறையினரை பாதுகாக்க வேலைத்திட்டம் வேண்டும்-முன்னாள் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-போதைப் பொருளில் இருந்து இந்த நாட்டு அடுத்த தலைமுறையினரை பாதுகாத்துக் கொள்வதற்காக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தற்போது நாட்டிற்குள் மிக வேகமாக போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தவறான உருவத்தை மக்களுக்கு காண்பிக்க அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சீன மக்கள் விடுதலை முன்னணி படையின் 91 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீன தூதுவராலயம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றிருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை இன்றுடன் நிறைவு

நீர்த்தேக்க பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

தனியார் சுப்பர்மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை – பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவிப்பு