உள்நாடு

போதைப்பொருளுடன் மூவர் கைது

(UTV|கொழும்பு) – புதுக்குடியிருப்பு பகுதியில் 6 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளி ஒன்றையும் காவல்துறையினர் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி சுமர் எட்டு இலட்சம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்

மரத்துடன் மோதிய தனியார் பஸ் – 15 பேர் காயம்.

புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்