உள்நாடு

போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு, மோதர பகுதியில் 18,900 போதை மாத்திரைகளுடன் லொறி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி 4.7 மில்லியனுக்கு அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐஸ், கேரளா கஞ்சா, போதை வில்லைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் களுத்துறை-வஸ்கடுவ பகுதியில் வைத்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் ரக போதைப்பொருள் 14.2 கிராம், கேரள கஞ்சா 22 கிராம், 27 போதை வில்லைகள் மற்றும் 64 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

editor

தேசிய கண் மருத்துவமனையின் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

துருக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இரங்கல் நிகழ்வு