உள்நாடு

போதைபொருட்களுடன் நால்வர் கைது

(UTV|கொழும்பு) – கொழும்பு குற்றவியல் பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரேன்பாஸ் பகுதியில் 05 கிராமுக்கும் அதிக ஹெரோயினுடன் 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ, பழைய விமான நிலைய வீதி சந்தியில் 05 கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், இரத்மலானை பிரதேசத்தில் 02 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள், மாளிகாகந்த, கல்கிஸ்ஸ மற்றும் மொரடுவை நீதவான் நீதிமன்றங்களில் இன்று (17) முற்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

கல்முனை விவகாரம் – முஸ்லிம் எம்.பிக்களுடன் விசேட கலந்துரையாடல் – கண்டுகொள்ளாத ஆதம்பாவா எம்.பி

editor

IMF இனது முக்கிய பேச்சுவார்த்தைகள் விரைவில்

கல்கிசை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு – ஒருவர் கைது

editor