கேளிக்கை

பொள்ளாச்சி விருந்தினராக லாஸ்லியா

(UTV|இந்தியா) – பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. இலங்கை பெண்ணான இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்.

இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது லாஸ்லியாவும் தமிழ்நாட்டிற்கு வந்து பொள்ளாச்சியில் பொங்கலை வானில் பறந்து கொண்டாடியுள்ளார்.

அதாவது பொள்ளாச்சியில் நடந்த பலூன் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொண்டாடியுள்ளார்.

Related posts

ஆறு ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த நஸ்ரியா

காட்டுக்குள் சாகச பயணம் செய்யும் அமலா

நடிகையாகிறார் பிரபல விளையாட்டு வீராங்கனை?