உள்நாடு

பொலிஸ் உயர் பதவிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உயர் பதவியில் உள்ள நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட, குற்றப் புலனாய்வு பிரிவு (CID) மற்றும் நிதி குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, மேலும் பல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

12.02.2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்படி உயர் பதவியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக அதிகரிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் டொக்டர் இல்லியாஸ் காலமானார்

editor

அனைத்து ஊழல்களும் வெகுவிரையில் வெளிவரும் – தேசிய மக்கள் சக்தியின் எம்.பி கிருஷ்ணன் கலைச்செல்வி

editor