உள்நாடு

பொலிஸார் மீது மோதிய டிப்பர் கண்டுபிடிப்பு

(UTV|கொழும்பு) – மாத்தறை ஹக்மன கோன்ஹல பகுதியில் வீதித் தடை போடப்பட்ட பகுதியில் பொலிஸாரின் மீது விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வண்டி ரன்ன பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ரன்ன, கட்டகடுவ பிரதேசத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஹக்மன கோன்ஹல பகுதியில் வீதித் தடை போடப்பட்ட பகுதியில் டிப்பர் வண்டி மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை டரக் வண்டி மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்த அர்ச்சுனா – சிவில் செயற்பாட்டாளர்கள் சிஐடியில் முறைப்பாடு

editor

என்னை சிறையில் அடைக்க கடும் முயற்சி- சுதந்திர கட்சி மலரும்

தேசிய சமாதான முன்னணி அன்னச் சின்னத்தில் களமிறங்கும்