சூடான செய்திகள் 1

பொரள்ளை பிரதேசத்தில் திடீர் தீ விபத்து

(UTV|COLOMBO) இன்று அதிகாலை 02.30 மணியளவில் பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காதர்னானவத்தை பிரதேசத்தில் திடீர் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதுடன் 141வது பிரிவில் தற்காலிக 04 வீடுகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீயினால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், தீயிற்கான காரணம இதுவரை கண்டறியப்படவில்லை.

பொரள்ளை பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Related posts

தமிழர்களின் பொலிஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் கேலிக்கூத்தாகிடும் – சரத் வீரசேகர

தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் – ரணில் விக்ரமசிங்க

குருநாகல் பஸ் நிலையத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு (PHOTOS)