உள்நாடு

பொரளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவிகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களுடன் துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களை பொரளை பொலிஸார் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

குணமானோர் எண்ணிக்கை 30,000 இனைக் கடந்தது

கிண்ணியா நகர சபை தவிசாளர் மீள விளக்கமறியலில்

புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம்