உள்நாடு

பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்

(UTV|கொழும்பு)- பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(24) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமது சங்கத்தின் செயற்குழு நேற்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களின் உறுப்பினர்கள், கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து தொற்றுநோய் தடுப்பு செயற்பாடுகளிலும் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாணந்துறை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்

editor

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

editor

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 68% நிறைவு