உள்நாடு

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விசேட வர்த்தமானி

(UTV|COLOMBO) – நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் தொடர்புடைய உத்தரவை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று(22) வௌியிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வெளிநாடுகளுக்கு வீட்டுப் பராமரிப்பு உதவியாளர் பதவிக்காக முதன்முறையாக வெளிநாடு செல்லும் பெண்களுக்கான அறிவிப்பு

பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு

தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா