உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுப் போக்குவரத்து பயன்படுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு) – நாளை(11) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் அரச மற்றும் தனியார் சேவையாளர்களுக்கு மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவை வழங்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாளை(11) முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களினதும் செயற்பாடுகளை நாளை முதல் பகுதியளவில் வழமைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நுவரெலியாவில் அரச பல்கலைக்கழகம்

உத்தியோகபூர்வமாக ஒப்படைக்காமல் ஒவ்வொரு இடங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் விசாரணை

editor

Update – நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – காணாமல் போன மற்றுமொரு மாணவனின் சடலம் மீட்பு

editor