அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்தல் வாக்குப்பதிவுகள் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதாலும் 15ஆம் திகதி பொளர்ணமி தினம் என்பதனாலும் இரு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.

அத்துடன், பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.

அத்துடன், தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் தினங்களில் விதிமுறைகளை மீறிச் சட்டவிரோதமான முறையில் செயற்படும் மதுபானசாலைகளுக்கு சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார் – தம்மிக்க பெரேரா.

சம்மாந்துறையில் பலஸ்தீன் மக்களுக்காக மகஜர் கையளிப்பும், துஆ பிரார்த்தனை

editor