உள்நாடு

பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

(UTV | கொழும்பு) – சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்தயில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை கண்டறிய உதவுமாறு காணாமல் போன பெண்கள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளவர்களின் உதவியை காவல்துறையினர் நாடியிருந்தனர்.

இதற்கமைய இன்றைய தினம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்ற குறித்த பெண்ணின் கணவர் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார்.

Related posts

சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் சுகாதாரம் பேணப்படவில்லையா ? சுகாதார பிரச்சினைகளா ? சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தை அழையுங்கள்

editor

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று

வாக்களர் அட்டைகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று முதல்