உள்நாடு

பேஸ்புக் ஜனாதிபதி ஒரு டீக்கடையை கூட நிருவாகிக்க முடியாதவர்: மஹிந்தானந்த

(UTV | கொழும்பு) –

மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச சமூகத்தை கையாளும் அறிவும் திறமையும் மக்கள் விடுதலை முன்னணிக்கு இல்லை எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவின் அரசாங்கத்தில் அனுரகுமாரவிற்கு ஐந்தாண்டுகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்றும் ஆனால், அவர்கள் அதனை பாதியிலேயே கைவிட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அனுரகுமார பேஸ்புக்கிற்கு மட்டுமே ஜனாதிபதி என்றும் ஒரு டீக்கடை கூட நடத்தாத ஜே.வி.பி எப்படி நாட்டை ஆள முடியும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வியெழுப்பினார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில்

editor

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் – சந்தேக நபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

editor

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு