உள்நாடுவணிகம்

பேலியகொடை மீன் சந்தை 3 நாட்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – பேலியகொடை பகுதியில் உள்ள மீன் சந்தையை நாளை(22) முதல் 3 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிலியந்தலை பகுதியில் உள்ள மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

குறித்த மீன் வியாபாரி ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று மீன் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுட்டதை தொடர்ந்தே பேலியகொடை மீன் சந்தையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் உள்ள அதன் விற்பனையாளர்கள் நாளை(22) PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை

100 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்யக் கூடும்

editor

அரச துறை: சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை