சூடான செய்திகள் 1

பேரூந்து அதிகரிக்கும் கட்டணம் தொடர்பில் தீர்மானம் இன்று…

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைவாக பேருந்து பயணக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது குறைந்த பட்ச பேருந்து பயணக்கட்டணமான 12 ரூபாவை 15 ரூபாவாக அதிகரிக்குமாறும் கோரப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்று(12) இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக அனைத்து தனியார் பேருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய போக்குவரத்து சபையின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரதமர் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு விஜயம்

14 இலட்சம் கொள்ளை – சந்தேகநபர் கைது

எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் திட மற்றும் அரை திட உணவுகளில் வர்ண குறியீடு