உள்நாடுபிராந்தியம்

பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு

பல்லேகலை, குண்டசாலை புதிய நகர பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலை அடுத்து, அதனை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் சுமார் 70 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்படுகிறது.

சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

உயர் கல்விக்காக வெளிநாடு புறப்படும் மாணவர்களுக்கு தடுப்பூசி

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் – சந்தேகநபர்கள் மூவர் கைது

editor

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்!