அரசியல்உள்நாடு

பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மாற்றப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனியொரு கட்சி பெரும்பான்மையைப் பெற்ற 161 உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர்கள் நியமனம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (31) வெளியிடப்பட்டது.

அதன்படி, மேற்படி உள்ளூராட்சி சபைகள் நாளை முதல் அடுத்த சில நாட்களில் கூடவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 178 உள்ளூராட்சி சபைகளில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறாததால், அந்த நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு உள்ளது.

அதன்படி, உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள், பிரதி மேயர்கள், தலைவர்கள் மற்றும் உப தலைவர்கள் நியமிக்கப்படும் விதம் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் செய்தித்தாள் விளம்பரங்களை முதலில் வெளியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியான 14 நாட்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட சபைகளின் உறுப்பினர்கள் கூடி, தங்கள் தலைவர்களை நியமிக்க வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான மேயர்கள், பிரதி மேயர்கள், தலைவர்கள் மற்றும் உப தலைவர்களுக்கான நியமனம் ஜூன் 17 ஆம் திகதிக்குப் பிறகு இடம்பெறும்.

நியமனங்கள் வழங்கப்படும் திகதிகள் குறித்து உள்ளூராட்சி ஆணையாளர் முன்கூட்டியே அறிவிப்பார் என்றும், நாளொன்றில் மாகாணத்தில் உள்ள ஒரு உள்ளூராட்சி சபையொன்றுக்கு மட்டுமே நியமனத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நாங்கள் சளைத்தவர்கள் அல்ல கொழும்பில் தனித்துப் போட்டி – டக்ளஸ் தேவானந்தா

editor

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ஜுனைதீன் நியமனம்

editor

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை காலமானார்