உள்நாடு

பெதும் கர்னர் அடையாள அணிவகுப்புக்கு..

(UTV | கொழும்பு) – இன்று, சமூக ஆர்வலர் பெதும் கர்னரை அடையாள அணிவகுப்புக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் திரு.ஹர்ஷன கெகுனாவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த முறைப்பாடு கோரப்பட்டபோது, ​​பெதும் கெர்னர் சார்பில் ஆஜரான றியென்சி அர்சகுலரத்ன எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தனது கட்சிக் காரரின் புகைப்படங்கள் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளமையினால் அணிவகுப்பு நடத்துவதற்கு சட்டரீதியான அடிப்படை இல்லை என சுட்டிக்காட்டினார்.

எனினும், குறித்த ஆட்சேபனையை நிராகரித்த மேலதிக நீதவான் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம் – வைத்தியர் அருச்சுனா

editor

அபராதம் செலுத்தத் தவறிய சகல கைதிகளுக்கும் மன்னிப்பு

ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது