உள்நாடு

பூஸா சிறையில் கைதி ஒருவர் குத்திக் கொலை

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கூர்மையான ஆயுதத்தால் குத்தி இவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தக் கொலையை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒரு கைதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இறந்தவர் சிவா என்ற கைதி என்றும், அவரது உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசுக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா பிரேரணை

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்பாளர்களுக்கான விசேட அறிவித்தல்

editor