உள்நாடு

பூஜித் ஜயசுந்தர முன்வைத்த மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி

(UTV|கொழும்பு) – கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த அடிப்படை உரிமை மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயரிடுவதற்கு உச்சநீதிமன்றம் இன்று(03) அனுமதி வழங்கியுள்ளது.

தனக்கு கட்டாய விடுறை வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் அரசியல் அமைப்புக்கு முரணானதென தெரிவித்து பூஜித் ஜயசுந்தர குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் குறித்த அடிப்படை உரிமை மனு மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மனுதாரரின் தரப்பு மற்றும் சட்டமா அதிபர் முன்வைத்த விடயங்களை கவனத்திற்கொண்ட நீதிபதிகள் குழாம் எதிர்வரும் 26 ம் திகதி மனுவை ஆராய்வதற்து தீர்மானித்தது.

Related posts

சீனாவில் உள்ள 30 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது முடியாத நிலை

பாடசாலை கல்விச் சுற்றுலாவிற்கு புதிய சட்டங்கள் உள்ளடங்கிய சுற்றுநிரூபம்

புத்தளத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி – கட்டுப்பணத்தை செலுத்தியது

editor