உள்நாடு

புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை(22) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை(22) ஆரம்பமாகவுள்ள மதிப்பீட்டுப் பணிகளுக்கு உரிய மத்திய நிலையங்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு ஏற்கனவே குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாபிட்டிய கல்வி வலயம் ஆகியவற்றில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியிலான ஏனைய பகுதிகளில் 39 மதிப்பீட்டு மத்திய நிலையங்களிலும், 391 மதிப்பீட்டு நிலையங்களிலும், பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், முன்னெடுக்கப்படவுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடளாவிய ரீதியில் மூடப்படும் 20 வைத்தியசாலைகள்!

மஹிந்த ராஜபக்ஷஅடுத்த பிரதமரா? விளக்கமளிக்கும் SLPP

அவசரகாலச் சட்டத்தை இலங்கை தவறாகப் பயன்படுத்துகிறது