கிசு கிசு

புர்காவை தடை செய்ய அமைச்சரவைப் பத்திரம்

(UTV | கொழும்பு) – புர்காவை தடை செய்வது தொடர்பான யோசனையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்பிரேரணையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கையொப்பம் இட்டுள்ளதாக குறித்த அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஏப்ரல்-21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு, புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரைகளை முன்வைத்துள்ள நிலையில் குறித்த தடைக்கு ஆயத்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2019 இல் இடம்பெற்ற ஏப்ரல்-21 தாக்குதலின் பின்னர் உடன் அமுலாகும் வகையில் புர்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சந்தேகத்துகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவும்

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 130 ஆவது இடத்தில் இலங்கை

சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் இவரா?