அரசியல்உள்நாடு

புத்தளம் புளிச்சாக்குளத்தில் ரிஷாட் எம்.பி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிகட்டு பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளரான எம்.எச்.முர்ஷித் அவர்களின் தேர்தல் பிரச்சார அலுவலகத் திறப்பு விழாவும், முதலாவது மக்கள் சந்திப்பும் இன்று வெள்ளிக்கிழமை (11) புத்தளம் புளிச்சாக்குளத்தில் இடம்பெற்றது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், ஆராச்சிகட்டுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் முஹம்மது நிஜாமுதீன், ஆராச்சிகட்டுவ பிரதேச சபைக்கு போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சுபா  மற்றும் தொழிலதிபர் முஹம்மது இர்ஷாத் உட்பட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள், உலமாக்கள் என பலரும்  பங்கேற்றிருந்தனர்.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

editor

கடும் மழை காரணமாக பதுளை – எல்ல புகையிரத சேவைக்கு பாதிப்பு

editor

பொருளாதாரத்தை உயர்த்துவதில் இரவுநேர பொழுதுபோக்குகள் முக்கிய பங்கு – டயானா கமகே