தனது மாமனார் மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்ததாகக் சந்தேகிக்கப்படும் ஒரு சந்தேக நபரை நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம், மின்னியா, தலுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
மின்னியா, தலுவ பகுதியைச் சேர்ந்த சிரில் ஜெயசீலன் (38) மற்றும் நடராஜா சசிகலா (35) ஆகிய தம்பதியினரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்று 3ஆம் திகதி மதியம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் மகளை திருமணம் செய்தவர் என தெரிவியவந்துள்ளது.
சந்தேக நபரின் கொடூரமான தாக்குதலால் காயமடைந்த அவரது மனைவி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர், தனது மாமனார் வீட்டிற்குச் சென்று தனது குழந்தையைக் கேட்டுள்ளார்.
குழந்தையை தங்கள் மருமகனிடம் ஒப்படைக்க மாமனாரும் மாமியாரும் மறுத்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து கூர்மையான ஆயுதம் கொண்டு வந்த மருமகன், தனது மாமனார் மற்றும் மாமியாரை கொடூரமாக தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த தம்பதியினரை அப்பகுதி மக்கள் புத்தளம் பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று 3ஆம் திகதி இரவு நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
