அரசியல்உள்நாடு

புத்தளம் அருவக்காடு திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை பிரதமர் ஹரிணி கண்காணித்தார்

மேல் மாகாணத்தின் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக களனி மற்றும் புத்தளம் அருவக்காடு பிரதேசங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தைப் பார்வையிட, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் ஒக்டோபர் 26ஆம் திகதி கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுண ஆராச்சி, அசித நிரோஷன், அருண பனாகொட, தேவானந்த சுரவீர, அஜித் கிஹான், ஹிருணி விஜேசிங்க, கயான் ஜானக, பைசல் மொஹமட் ஆகியோரும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தின் பொது மக்கள், சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

-பிரதமர் ஊடகப் பிரிவு

Related posts

‘SF லொக்கா’ துப்பாக்கிச்சூட்டில் பலி [UPDATE]

2 வயது சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

editor