அரசியல்உள்நாடு

புத்தளத்தில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயங்களைத் திறந்து வைத்தார் ரிஷாட் எம்.பி

கடந்த வெள்ளிக்கிழமை (11) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச சபை, ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை, கல்பிட்டிய பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.

அந்தவகையில், ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபையில், புளிச்சாக்குளம் – ஆண்டிமுனை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர் ஹில்மி முர்ஷித்தின் கட்சிக் கிளை காரியாலயத் திறப்பு நிகழ்வு புளிச்சாக்குளத்திலும், புத்தளம் பிரதேச சபையில், பொத்துவில்லு வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜீதின் கட்சிக் கிளை காரியாலயத் திறப்பு நிகழ்வு நாகவில்லிலும் இடம்பெற்றது.

அத்துடன், கல்பிட்டிய பிரதேச சபையில், கரம்பை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர் M.A.M.ஆஸ்கீன் மற்றும் பட்டியல் வேட்பாளர் நஹ்லானை ஆதரித்து கரம்பை – சபா மர்வா (A,B), சிலாவத்துறை ஹைராத், இலந்தமோட்டை, சம்சம் நகர், உளுக்காப்பள்ளம், ஹுசைனியாபுரம், ஹுசைனியாபுரம் மேற்கு, 25 ஏக்கர் ஆகிய பிரதேசங்களில் மக்கள் சந்திப்புக்களும் இடம்பெற்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஊடகப்பிரிவு

Related posts

நியோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி

மட்டக்களப்பில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்ய தீர்மானம்