வணிகம்

புதிய 25 கைத்தொழில் துறைகள் அபிவிருத்தி

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் புதிய 25 கைத்தொழில் துறைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தென்மாகாண கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிய அளவிலான தொழில்துறையினர் மற்றும் கிராம சுயதொழில் வாய்ப்பை மேம்படுத்துவதற்காக தென்மாகாண கைத்தொழில் அமைச்சு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த அபிவிருத்திதிட்டங்களுக்காக மாகாண சபை 43 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடற்றொழில், கால்நடை உற்பத்தி, கைப்பணி போன்ற துறைகளில் கூடுதலான கவனம் செலுத்தப்படுமென்று தென்மாகாண அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு நாளை ஆரம்பம்

சீனாவின் முதலாவது சர்வதேச இறக்குமதி கண்காட்சி

இலங்கையின் ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும் நிலை