அரசியல்உள்நாடு

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கௌரவ ஆர்.எம்.எஸ். ராஜகருணா, கௌரவ மேனகா விஜேசுந்தர, கெளரவ சம்பத் பி.அபேகோன் மற்றும் கௌரவ எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

சஜித் அணியில் மதுபானம் விநியோகம் செய்யும் நபர் : பொன்சேகா விமர்சனம்

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

துறைமுக வளாகத்திலிருந்து வாகனங்களை வெளியேற்ற நடவடிக்கை