வகைப்படுத்தப்படாத

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலுமொரு நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, இரண்டு பிரதான சந்தேகத்துக்குரியவர்களும் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல உதவியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேகத்துக்குரியவர்களும் சென்னையில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல உதவியவர் தலைமன்னார் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி இரவு பிலியந்தல பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காக சென்ற காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் காவற்துறை அதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் பலியானதுடன் 5 பேர் காயமடைந்தனர்.

அத்துடன், குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்றுவந்த சிறுமியும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அபுதாபியில் நிர்மாணிக்கப்படும் முதல் ஹிந்து கோயில்

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் சுற்றிவளைப்பு இன்று முதல்

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பான சுற்றிவளைப்பு ஆரம்பம்