உள்நாடுபிராந்தியம்

பிரபல போதைப்பொருள் வியாபாரி அதிரடியாக கைது

நீண்ட காலமாக போதை வியாரம் செய்துவந்த வியாபாரி இன்று (10) வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

மூன்று நாள் தொடர் முயற்சியினால் வாழைச்சேனை பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரின் கூட்டு முயற்சியினாலும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலன்னறுவையைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியொருவர் இன்று அதிகாலை புனாணை, ரிதிதென்ன பிரதேசத்தில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வியாபாரி கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்து கல்குடாப்பிரதேசத்தில் வினியோகித்து வந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 5,320 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 100 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரையும் சான்றுப்பொருட்களையும் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

Related posts

கட்டுப்பாடுகளுடன் 20 வீத ஊழியர்களை தொழிலுக்கு அழைக்க தீர்மானம்

ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்டவர்களுக்கு விளக்கமறியல்

editor

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது

editor