நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அத்தோடு விற்பனைக்காக இருந்த ஐஸ் போதைப் பொருளையும் கல்முனை விசேட அதிரடிப் படையினர மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (31) சனிக்கிழமை இரவு வேளையில் நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு பிரபல பாடசாலை பின் பகுதியில் இக் கைது இடம்பெற்றுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கையின் போது 39 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மற்றும் கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்