அரசியல்உள்நாடு

பிரதியமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு சங்க உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்

தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு சங்க உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த 31 ஆம் திகதி நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது, தேசிய
ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பதவி உயர்வு,‌ ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது குறித்த பிரச்சினைகள இனங்கண்டு கட்டம், கட்டமாக தீர்வு காண்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நீதி அமைச்சின்‌ மேலதிக செயலாளர், உதவி செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

-கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்

Related posts

கலால்வரித் திணைகளத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம் [VIDEO]

விஜித ஹேரத்தை சந்தித்தார் ஜூலி சங்

editor

மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்