வகைப்படுத்தப்படாத

பிரதமர் நரேந்திர மோடிக்கு என்றுமில்லாத அளவு பாதுகாப்பு அச்சுறுத்தல்

(UTV|INDIA)-இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு என்றுமில்லாத அளவு அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதனால் அவரது வீதி பிரசார நடவடிக்கைகளை தடுக்கவும் உத்தர விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவருடனான சந்திப்புகளுக்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படாது என்றும், முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் உயரிய சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலைக் கருத்திற் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி முக்கியமாக இலக்கு வைக்கப்படுகிறார்.

அவருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்துவந்த போதும், தற்போது உருவாகியுள்ள நிலைமை பாரதூரமானது என்று, உள்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

අබ්දුල්ලා යළි රිමාන්ඩ්

போக்குவரத்து அபராத சீட்டை வீட்டிற்கே அனுப்பும் திட்டம்

Nightclub collapse kills two in South Korea