உள்நாடு

பிரதமரின் அழைப்பினை ஏற்று ஹர்ஷா – எரான் பிரதமர் அலுவலகத்திற்கு

(UTV | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோர் பிரதமர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடினர்.

இதில் அரசாங்க அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளதுடன் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் நீண்ட விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, ​​பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு பல நாணயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் ஆதரவை பிரதமர் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக திரு.ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

மைத்திரிபால, CID யிடம் வாக்குமூலம் வழங்கியது பற்றி விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு..

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராகக் களமிறங்க விரும்பவில்லை – எரான் மிகப் பொறுத்தமானவர் – ஹிருணிகா பிரேமச்சந்திர

editor