இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (15) பிற்பகல் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதுடன், வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.