வகைப்படுத்தப்படாத

பாரிஸில் பழைமைவாய்ந்த தேவாலயத்தில் பாரிய தீ

(UTV|FRANCE) பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான நோட்ரே டேம் (Notre – Dame) தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

850 வருடங்கள் பழைமைவாய்ந்த குறித்த பேராலய கட்டடத்தின் கூரைப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

எனினும், மணிக்கோபுரங்கள் இரண்டும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேராலயத்துக்குள் உள்ள கலைப்படைப்புக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது மிகமோசமான சோக நிகழ்வு என பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

 

Related posts

‘போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்திற்கு எனது நாட்டின் உயர்ந்த பட்ச ஒத்துழைப்பை வழங்க தயார்’ – சீசெல்ஸ் ஜனாதிபதி

இலங்கை யுத்தம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட அஸ்மா ஜஹாங்கிர் காலமானார்

மற்றுமொரு சிறுவர் கடத்தல் முயற்சி : அக்குறணையில் சம்பவம் – பெற்றோர் கருத்து!