உடவெவல யக்காவெல பகுதியில் பயணித்த இ.போ.ச பஸ் ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று விழுவதை கண்டு பஸ் வண்டியின் சாரதி பயணிகளை காப்பாற்றுவதற்காக பஸ்ஸை பாதுகாப்பான இடத்திற்கு திருப்பியுள்ளார்.
இச்சம்பவத்தில் பாரிய மரம் பஸ்ஸின் மீது விழுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் மரத்தின் சிலபகுதிகள் பஸ் சாரதியின் பக்கத்தை தாக்கியதால் சாரதி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
பாரிய உயிர்ச் சேத விபத்து ஒன்றிலிருந்து பயணிகளை காப்பாற்றி சிறுகாயமடைந்த பஸ் சாரதியை அனைவரும் பாராட்டியுள்ளனர்