அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலுக்கு தயார் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (24) நெலும் மாவத்தையில் நடைபெற்றுள்ளது.

அதில், ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வதா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கட்சி முடிவு செய்துள்ளது. அத்தோடு, முன்னதாக கட்சியில் இருந்து விலகியவர்களில் பலரை மீண்டும் இணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்

விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் ஏற்படும் பாதிப்பு

editor

ரணில் ஆடுகளத்தில் கூட இல்லை – வெற்றிக் கம்பத்தை அண்மிக்கிறார் சஜித் – அநுர தோற்பது நிச்சயம் – ரிஷாட் எம்.பி

editor