உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன, வலான மோசடி தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் தொடர்பான வழக்கில் அவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் வலான மோசடி தடுப்புப் பிரிவில் இன்று காலை சரணடைந்திருந்தார்.

இந்த வழக்கில் முன்னதாக அவரது கணவரும் அண்மையில் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

MCC உடன்படிக்கை மீளாய்விற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரல்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் நாளை

நாட்டில் தலைதூக்கும் டெங்கு