உள்நாடு

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான தீர்மானம்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 03 ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்றத்தைக் கூட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று(29) இடம்பெற்ற பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதற்கமைய, எதிர்வரும் 04, 05, 06 ஆம் திகதிகளில் சபை நடவடிக்கையை இடைநிறுத்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற பொலிஸ் பிரிவை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டமையால் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க CID யில் ஆஜராகியுள்ளனர்.

editor

பகிடிவதை இந்த வருடம் முடிவுக்கு கொண்டுவரப்படும் – பந்துல

ஈரான் மீதான தாக்குதலால்: உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு