உள்நாடு

பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்தார் புதிய பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரைத் தனித்தனியாகச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், பாதுகாப்புச் செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவையும் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலர் பதவியேற்ற பிறகு சிரஷ்ட அதிகாரிகளை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

Related posts

ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகத்தை இலங்கை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது – ஜனாதிபதி ரணில்

editor

உயர் கல்விமுறையில் மறுசீரமைப்பு அவசியம்

தகாத உறவில் இருந்த மனைவி – கண்டுபிடித்து போட்டு தள்ளிய கணவன் – இலங்கையில் சம்பவம்

editor