உள்நாடு

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்

(UTV | கொழும்பு) – பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (01) முதல் புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (31) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இந்த கடிதம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியுமான சவேந்திர சில்வா இன்று (31) இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம் தற்போது இல்லை

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்

நீடித்து வரும் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும் மத்திய வங்கியின் ஆளுநர் IMF உதவியை எதிர்பார்க்கிறார்