சூடான செய்திகள் 1

பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு புகையிரத சேவை…

(UTV|COLOMBO)-பாடசாலை விடுமுறை காலத்தில் மாணவர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் மலையக பகுதிகளுக்கு சுற்றுலா செல்லக் கூடும் என்ற நோக்கில் விஷேட புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு மலைநாட்டுக்கான புகையிரத மார்க்கத்தில் விஷேட புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக
புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளாந்தம் காலை 7.30 அளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை வரை பயணிக்கவுள்ளது.

மறுநாள் முற்பகல் 9.30 அளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளதாக கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

இன்றைய தினமும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை

எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர – மாலிங்க புகழாரம் (video)